2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கரைதுறைப்பற்றில் பலருக்கு கொரோனா

Niroshini   / 2021 ஜூலை 28 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

கரைதுறைப்பற்று காணிப் பிரிவில் பணியாற்றுபவர்களுக்கே, இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துடன் தொடர்புடைய பணியாளர் வந்து சென்ற காரணத்தால், தொற்று பரவலடைந்துள்ளது.

முதற்கட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது எட்டுப் பேருக்கு தொற்று இருப்பது, நேற்று  (27) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .