2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

காணிப் பிணக்குகள் தொடர்பான முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன

க. அகரன்   / 2018 டிசெம்பர் 18 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணிப் பிணக்குகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபை தவிசாளர் இரட்ணசிங்கம் நவரட்ணம் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட காணிப் பிணக்குகளுக்கு விரைவாகவும், சுமுகமாகவும் தீர்வு காணும் முகமாக  நீதி அமைச்சின் கீழ் மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவினால்  நியமிக்கப்பட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபை கடந்த 1ஆம் திகதி முதல் செயற்படத் தொடங்கியுள்ளது.

அதனடிப்பனையில் தற்போது காணிப் பிணக்குகள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்க முடியும். பெற்றுக் கொள்ளப்படும் பிணக்குகள் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, காணிப் பிணக்குகளை நேரடியாக அல்லது தபாலில்  அனுப்பி வைக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .