2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா

Niroshini   / 2021 ஜூலை 15 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி மாவட்டத்தில், நேற்றைய தினம் (14) 16  கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மாவட்ட தொற்று நோயியல் பிரிவு
தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி - ஜெயபுரம் வீதி அபிவிருத்தி பணிகளோடு தொடர்புபட்டவர்கள், கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள புகைப்பட கலையகமொன்றின் ஊழியர், வட்டக்கச்சியில் தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என பரவலாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் முழுமையான சுகாதார கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடந்துகொள்ளுமாறும் சுகதார பிரிவு கோரியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .