2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கோவில் வீதி வளைவு சேதம்: 4 நாள்களுக்கு பொருத்துமாறு உத்தரவு

Editorial   / 2019 மார்ச் 04 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் - திருக்கேதீஸ்வர கோவில் வீதி வளைவை, சிவராத்திரியை முன்னிட்டு உடனடியாக, மீண்டும் 4 நாள்களுக்கு பொருத்தி வைக்குமாறு, மன்னார் நீதவான் சற்று முன் உத்தரவிட்டுள்ளதாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சிவராத்திரி உற்சவம் நடைபெற வேண்டிய அவசரம் கருதி, இன்றைய தினம் விடுமுறை என்று நாளை வரை காத்திருக்காமல், இவ்வழக்கை நீதவானின் இல்லத்துக்குக் கொண்டு செல்லுமாறு, மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு இன்று காலை அறிவுறுத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே,  குறித்த வழக்கு விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .