Editorial / 2019 ஜூன் 22 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
நெடுங்கேணியிலிருந்து வவுனியாவுக்குச் சென்ற சிறுவர்கள் இருவரை காணவில்லை என்று, வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (20) வவுனியா வடக்கு, நெடுங்கேணி - நயினாமடு பகுதியிலிருந்து பஸ்ஸில் வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணை ஒன்றுக்காச் சென்ற இரு பிள்ளைகளே, இவ்வாறு காணாமல் போயுள்ளதாக, தந்தை ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
விஜயசுந்தர் தர்சன் (வயது 19), விஜயசுந்தர் நிதர்சன் (வயது 16) ஆகியோரே, இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போயுள்ள இருவர்களை பற்றிய தகவல்களை அறிபவர்கள், 077-5415912 அல்லது 077-5261259 எனும் அலைபேசி இலகத்துக்கு அறியத்தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago