2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு; அறுவர் கைது

Freelancer   / 2022 பெப்ரவரி 22 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 6 பேரும் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 4 டிப்பர்கள் மற்றும் 2 உழவு இயந்திரங்கள் ஆகியனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளான். 

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு நேற்று பொலிஸ் பிணை வழங்கப்பட்டதுடன், அவர்களை இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (K)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X