2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு; அறுவர் கைது

Freelancer   / 2022 பெப்ரவரி 22 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 6 பேரும் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 4 டிப்பர்கள் மற்றும் 2 உழவு இயந்திரங்கள் ஆகியனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளான். 

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு நேற்று பொலிஸ் பிணை வழங்கப்பட்டதுடன், அவர்களை இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (K)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X