2025 மே 05, திங்கட்கிழமை

சந்தை வீதியில் நவீன இறைச்சிக் கடைகள் உருவாக்கம்

Niroshini   / 2021 மே 18 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா - சந்தை வீதியில் அமைந்துள்ள நகரசபையின் பொதுமலசலகூடம் அமைந்துள்ள பகுதியில், நவீன வசதியுடன் கூடிய இறைச்சிக் கடைகள் அமைக்கப்பட்டவுள்ளன என, வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் பல்வேறு சமூகசீர்கேடான சம்பவங்கள் இடம்பெற்றுவருவதாக கிடைக்பெற்ற தொடர்ச்சியான முறைப்பாடுகளைக் கருத்தில் கொண்டே, சந்தைவீதியில் அமைந்துள்ள  நகரசபையின் பொதுமலசலகூடத்தை அகற்றி, அங்கு நவீன வசதிகளுடன்கூடிய, இறைச்சிக் கடைகளையும் புதிய மலசலகூடம் ஒன்றையும் அமைப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாகவும், அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X