Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
சிலாவத்துறை பகுதியில், தனியாருக்குச் சொந்தமான காணியொன்று, நீண்டகாலமாகப் பராமறிப்பற்ற நிலையில் காணப்பட்டதையடுத்தே, அந்தக் காணியை, பொதுத் தேவைக்காக, முசலி பிரதேச சபை எடுத்துக்கொண்டதாக, அந்தப் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை பகுதியில், தனியாருக்குச் சொந்தமான காணிக்குள், முசலி பிரதேச சபையினர் அனுமதியின்றி உட்பிரவேசித்து, அக்காணியை அடாத்தாகப் பிடித்துள்ளதாககக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முசலி பிரதேச சபைத் தவிசாளரைத் தொடர்புகொண்டு வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், குறித்த காணியானது, 2009ஆம் ஆண்டில் இருந்து பராமறிப்பற்ற நிலையில் காணப்பட்டதாகவும் குறித்த காணி, ஓட்டோ தரிப்பிடமாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், குறித்த காணியால், சுகாதார அசௌகரியங்கள் ஏற்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள் தொடர்ச்சியாக முறைப்பாடு தெரிவித்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பொதுத் தேவைக்காகப் பயன்படுத்தும் நோக்கிலேயே, குறித்த காணியை, பிரதேச சபை எடுத்துக்கொண்டதாகத் தெரிவித்த அவர், அப்பகுதியில் பொது மலசலகூடமொன்றை நிர்மாணிக்க இடமில்லாத காரணத்தால், அந்தக் காணியில் பொது மலசலகூடமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago