2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

‘சுகாதார முறைப்படி பால் கொள்வனவு செய்வதில்லை’

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பால் கொள்வனவில் ஈடுபடுகின்ற நிறுவனங்கள் பாலை சுகாதார முறைப்படி கொள்வனவு செய்வதில்லையென, அப்பகுத மக்கள் தெரிவித்துள்ளனர்.

வீதியோரங்களில் மக்கள் கூடுகின்ற இடங்களில் பாலினை வைத்து கொள்வனவு செய்வதன் காரணமாக, பாலுக்கான சுகாதாரத் தன்மை குறைந்து காணப்படுவதாகவும் பாலைக் கொள்வனவு செய்யும் இடங்கள் நிரந்தரக் கட்டடங்களாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகின்றது. 

ஆனால் பாலைக் கொள்வனவு செய்யும் நிறுவனங்கள் பாதுகாப்பற்ற இடங்களில் இருந்து பாலைக் கொள்வனவு செய்து கொண்டு செல்வதாகவும் இது தொடர்பாக சுகாதாரப் பரிசோதகர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், பாலை பாதுகாப்பான முறையில் கொள்வனவு செய்வதற்கு அதிகாரிகளும் நிறுவனங்களும் கவனஞ் செலுத்த வேண்டும்.  பாதுகாப்பற்ற முறையில் பாலினைக் கொள்வனவு செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .