Editorial / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
காஞ்சிரமோட்டையில் குடியேறும் மக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் ஜனாதிபதியின் இணைப்பாளர் கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற வவுனியா வடக்குப் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறும் போது, வனவளத் திணைக்களம் அப்பகுதி தமது காணியெனத் தெரிவித்து அந்த மக்களுக்கு தொடர்ச்சியாக இன்னல்களை கொடுத்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.
இந்த நிலைக்கு, ஜனாதிபதியின் இணைப்பாளரும் அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவருமே, காரணம் என தற்போது தெரியவந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இவர்கள், மீள்குடியேறிய மக்களுக்கும் மீள்குடியேற்றத்துக்கு பங்கேற்கும் அரச அதிகாரிகளுக்கும் கொலை அச்சுறுத்தல்கள் மேற்கொண்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனவே, இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்த வேண்டுமென, அவர் மேலும் கூறினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான், குறித்த நபர் ஜனாதிபதியின் இணைப்பாளர் இல்லையெனவும் அந்நபர் ஜனாதிபதியின் குறித்த சில வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நபரெனவும் தெரிவித்தார்.
அவரூடான ஜனாதிபதியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தப்படுமாக இருந்தால், இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக, அவர் மேலும் கூறினார்.
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026