Niroshini / 2021 ஜூன் 06 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், 69 ஆயிரத்து 704 பேர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு தகுதிபெற்றுள்ளனரென, கிளிநொச்சி மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில், தற்போது தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையிலேயே, கிளிநொச்சி மாவட்டத்தில், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஊழியர்களென 1,174 பேருக்கு இது வரைக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டிருபபதாக, அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் 450 பேருக்கு, தடுப்பூசிகளுக்கான தேவைப்பாடுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 minute ago
28 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
44 minute ago