2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Editorial   / 2018 நவம்பர் 01 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியா - நெடுங்கேணி, ஒலுமடு பகுதியில், கட்டுத்துப்பாக்கி வைத்திருந்த ஒருவர், நேற்று முன்தினம் (31) கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை 3.30 மணியளவில், சட்டவிரோதமான முறையில், கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர், காட்டுப் பகுதிக்கு வேட்டையாடச் சென்றிருப்பதாக, நெடுங்கேணி பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பதிவுகள் எதுவுமின்றி, சட்டவிரோதமாக கட்டுத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில், 50 வயதுடைய மேற்படி நபர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் கூறினர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .