Editorial / 2019 ஏப்ரல் 27 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் சர்வமத கலந்துரையாடல், கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்று 9.30 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் சைவ, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத குருக்கள் மதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ,வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான குருகுலராஜா, பசுபதிப்பிள்ளை கரைச்சி தவிசாளர் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு
இதன்போது, ஏற்பட்டுள்ள திடீர் சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என பல்வேறு பட்ட விடயங்கள் பேசித் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்துத் தெரிவித்த கிளிநொச்சி புனித திரேசா தேவாலய மதகுரு யேசுதாஸ் , 21ஆம் திகதி காலை தான் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போது, தேவாலயத்துக்கு வருகைதந்த பெண் ஒருவர், இப்பொது பொலிஸாரால் தேடப்படும் படங்களில் பார்த்ததாகவும் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago