2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

‘தொண்டர் சேவை ஊடாக ஐ.நா படையில் இணையலாம்’

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

தொண்டர்கள் பணியில் ஈடுபடுவதன் ஊடாக, ஐ..நாவுக்ன சர்வதேச தொண்டர்கள் படையில் இணையமுடியுமென, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.கோகுலராஜா தெரிவித்தார்.

அத்துடன், தொண்டர்கள் பணியில் ஈடுபடுவதன் மூலம், பல்வேறுபட்ட அறிவுகளையும் அனுபங்களையும் பெற்றுக்கொள்ளலாமெனவும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்ட செஞ்சிலுவவை சங்கத்தின் தொண்டர்கள் கௌரவிப்பு, மாவட்ட அலுவலகத்தில், நேற்று (02) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்துரையாற்றிய அவர், மனித வாழ்க்கைக்கு பல்வேறு வகையான பாடங்களை கற்றுக்கொடுக்கும் விடையம்தான் தொண்டர் சேவையெனவும் குறிப்பிட்டார்.

இன்று இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தொண்டர்களாக சேவையாற்றம் நீங்கள், உங்கள் அடுத்த கட்ட கல்வியையும் மேம்படுத்திக் கொண்டு செல்வீர்களாக இருந்தால், ஐ.நாவில் உள்ள தொண்டர்களுக்கான படையில் இணைந்து கொள்ளலாமெனத் தெரிவித்த அவர், அதன்மூலம் சர்வதேசத்தின் அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்ளலாமெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .