2025 மே 16, வெள்ளிக்கிழமை

தொலைத்தொடர்பு சாதனங்கள் மீட்பு

Editorial   / 2020 ஜூன் 12 , பி.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்களை, பொலிஸார்  மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (11) மாலை மீட்டுள்ளனர்.

தொலைத்தொடர்பு சாதனங்கள் மூன்றும் அதனோடு கூடிய உதிரிப்பாகங்களும் அடையாளப்படுத்தப்பட்டு, பேசாலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பொருள்கள் 2007ஆம் ஆண்டு யுத்த காலத்துக்குட்பட்டதென, பேசாலை உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி  தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரனைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .