Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - நட்டாங்கண்டல் பிரதேச வைத்தியசாலையில் 24 மணிநேரமும் சேவையாற்றக்கூடிய வகையில், வைத்தியரை நியமிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நட்டாங்கண்டல் பிரதேச வைத்தியசாலை நீண்ட காலமாக வைத்தியர் இல்லாது இயங்கிவந்த நிலையில், தற்போது ஒரு வைத்தியர் சேவையாற்றுகின்ற போதும், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளது
குறித்த வைத்தியசாலையில் அனைத்து வசதிகளுடனும் வைத்தியர் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ள போதும், குறித்த வைத்தியசாலையில் காலை 8 மணி முதல் மாலை நான்கு மணி வரை மாத்திரமே வைத்திய சேவைகளை பெறக்கூடியதாக உள்ளது.
அதனை விட இரவு நேரமோ அதிகாலை நேரமோ ஏதேனும் திடீர் விபத்துகள் நிகழ்ந்தால் உயிரிழப்பே ஏற்படுகிறது. வைத்திய சாலையில் தாதியர் கூட இல்லாத நிலை காணப்படுகிறது
மூண்டுமுறிப்பு, பனங்காமம் ,நட்டாங்கண்டல், ஒட்டங்குளம், கரும்புள்ளியான், செல்வபுரம், பாண்டியன்குளம், சிறாட்டிக்குளம், கிடாயப்பிடித்தகுளம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் குறித்த வைத்தியசாலையை நம்பியே வாழ்கின்றனர்.
எனவே, இந்த வைத்தியசாலையில் 24 மணிநேரமும் சேவையாற்றக்கூடிய வகையில் வைத்தியரை நியமிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 hours ago
9 hours ago
9 hours ago
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
25 Sep 2025