2025 ஜூன் 04, புதன்கிழமை

நானாட்டான் பிரதேச சபையை கூட்டமைப்பு கைப்பற்றியது

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நானாட்டான் பிரதேச சபையை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

நானாட்டான் பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் இன்று (11) நானாட்டான் பிரதேச சபையில் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த சபையின் தலைவர் பதவிக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு; திருச்செல்வம் பரஞ்சோதியையும், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழர் விடுதலைக்கூட்டணி றோஜர் ஸ்ரலினையும் முன்மொழிந்தனர்.

இதன்போது, 16 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் இரகசிய வாக்களிப்புக்கு ஆதரவளித்தமையால் இரகசிய வாக்களிப்பு இடம்பெற்றது.

இதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் திருச்செல்வம் பரஞ்சோதி 8 வாக்குகளையும், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர் றோஜர் ஸ்ரலின் 8 வாக்குகளையும் பெற்றனர்.

இந்த நிலையில் மேலதிக வாக்குச்சீட்டான திருவுளச்சீட்டின் மூலம் தலைவர் தெரிவு இடம்பெற்றது.

இதன்போது நானாட்டான் பிரதேச சபையின் தலைவராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் திருச்செல்வம் பரஞ்சோதி தெரிவு செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, உப தலைவர் தெரிவுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் போ.லூர்து நாயகம்பிள்ளை மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ம.ஜெயானந்தன் குரூஸ் ஆகிய இருவரது பெயர்களும் முன் மொழியப்பட்டது.

இதன்போது பகிரங்க வாக்கெடுப்புக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளித்த நிலையில் உப தலைவர் தெரிவு பகிரங்க வாக்களிப்பு மூலம் இடம்பெற்றது.

குறித்த வாக்களிப்பின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் போ.லூர்து நாயகம் பிள்ளை 8 வாக்குகளையும், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ம.ஜெயானந்தன் குரூஸ் 8 வாக்குகளையும் பெற்று சம நிலையை பெற்றனர்.

இந்த நிலையில் மேலதிக வாக்குச்சீட்டான திருவுளச்சீட்டின் மூலம் உப தலைவர் தலைவர் தெரிவு இடம்பெற்றது.

இதன் போது நானாட்டான் பிரதேச சபையின் உப தலைவராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்  போ.லூர்து நாயகம் பிள்ளை திருவுளச்சீட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .