Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் ஒரு பகுதியில் கடந்த 4 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மின்சார சபைக்கு அறிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்கந்தபுரம் கிராமத்தில் ஒரு வீதி புனரமைப்பின் போது கனரக இயந்திரம் மூலம் வீதியின் இரு புறமும் வெட்டப்பட்டதன் காரணமாக மின்சார தூண்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. இதனால் குறித்த பிரதேசத்தின் மின்சாரம் கடந்த சனிக்கிழமை (9) முதல் துண்டிக்கப்பட்டுள்ளது.
அன்று தொடக்கம் இன்று (12) வரை கிளிநொச்சி மின்சார சபைக்கு பொது மக்களால் அறிவித்த போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலைமை காரணமாக வீதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிளிநொச்சி மின்சார சபையினரிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, இன்று (12) குறித்த பணிகளை மேற்கொள்கின்றோம். எங்களிடம் பாரம் தூக்கி இல்லாதன் காரணமாக கடந்த சில நாட்களாக பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago