2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பாடசாலை மாணவி கடத்தல் என முறைப்பாடு

George   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் செவ்வாய்க்கிழமை (18) பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று புதன்கிழமை (19) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (18) பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய 17 வயதுடைய மாணவியை தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கடத்தியுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நகரை அண்மித்த தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே இம்மாணவியை கடத்தியுள்ளதாக முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சி நன்னடத்தை அதிகாரியிடமும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .