2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பின் கதவினூடாகச் சென்று இரகசியக் கலந்துரையாடல்

George   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டச் செயலகத்தின் பின்  கதவினூடாக  சென்ற அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அவசர கலந்துரையாடலில் சனிக்கிழமை(0) ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்ற இந்த இரகசியக் கலந்துரையாடலில் அமைச்சர் ரிஷாட் பதியுதின், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்கள், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மெல், பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், திணைக்களத் தலைவர்கள், பொலிஸ், கடற்படை, இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த இரகசிய கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

இது இவ்வாறு இருக்க, அமைச்சர்களின் திடீர் விஜயம் மற்றும் திணைக்களங்களில் அமைச்சர்களின் முன்னிலையில் இடம்பெறும் கலந்துரையாடல்களுக்கு கடந்த சில மாதங்களாக மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .