2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

பசளை விலைகூடியமையால் நெருக்கடி

நடராசா கிருஸ்ணகுமார்   / 2017 நவம்பர் 23 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில், பசளை கூடுதலான விலையில்  பசளை கூடுதலான விலையில் விற்கப்படுவதாக, விவசாயிகளினால் தெரிவிக்கப்படுகின்றது.

காலபோக நெற்செய்கையில், தற்போது விவசாயிகள் ஈடுபட்டுள்ள நிலையில்,  வர்த்தக நிலையங்களில் கூடுதலான விலையில் பசளை விற்கப்படுவதன் காரணமாக நெற்பயிர்களுக்கு பசளை இடுவதில் விவசாயிகள் நெருக்கடியை  எதிர்நோக்கியுள்ளனர்.

பசளைக்கான மானியப் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில்,  கடனாகவும் பணம் கொடுத்தும் பசளையை வாங்கும் விவசாயிகள், கூடுதலான விலையிலேயே வர்த்தக நிலையங்களில் பசளை வாங்க வேண்டியுள்ளாகவும் இது தொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்தி, பசளையை அதன் உத்தரவாத விலைக்கே வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை  மேற்கொள்ள வேண்டும் எனவும், விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .