2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

பயங்கரவாதம் இல்லாத நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் எதற்கு?

Editorial   / 2019 பெப்ரவரி 20 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன் 

மு.தமிழ்ச்செல்வன்     

இலங்கையில் தற்போது பயங்கரவாதம் இல்லை என அரசு அறிவித்த போது  ஏன் இன்னும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாத்திரம் நடைமுறையில் வைத்திருக்கிறது எனத் தெரிவித்து கிளிநொச்சியில் இன்று  (20) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி யாழ்,முல்லைத்தீவு வவுனியா மாவட்ட மக்கள் சிலர் இணைந்து இன்று (20) கிளிநொச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஏ-9 வீதியால் டிப்போ சந்திவரை சென்றடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .