2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பள்ளிக்குடா இறங்குதுறையை அபிவிருத்தி செய்யுங்கள்

Niroshini   / 2016 ஒக்டோபர் 20 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பூநகரி பள்ளிக்குடா இறங்குதுறையினை அபிவிருத்தி செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிக்குடா இறங்குதுறை அபிவிருத்தி செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது. இதனால் கடற்தொழிலுக்கு செல்லும் கடற்றொழிலாளர்கள் தமது படகுகளை கடலுக்கு கொண்டு செல்வதிலும் படகுகளை கரை சேர்ப்பதிலும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடலிலிருந்து கரையை வந்தடைவதற்கு அமைக்கப்பட்ட ஆழமான வாய்க்கால்பகுதி மண் நிரம்பி காணப்படுகின்றது.  இதனை ஆழமாக்கி தருமாறும் இப்பகுதி கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூநகரி பிரதேசத்தில் உள்ள ஆறு மீனவர் இறங்குதுறைகளைப் புனரமைப்பதற்கு 25.5 மில்லியன் ரூபாய் நிதி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .