2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாடசாலையில் கொள்ளை; 16 வருடங்களின் பின் ஒருவர் கைது

Editorial   / 2021 டிசெம்பர் 05 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன்

16 வருடங்களுக்கு முன்னர் பாடசாலை​யொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நபரொருவர், நெல்லியடி பொலிஸாரால் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளர்.

 2005ஆம் ஆண்டு, கரணவாய் மகா வித்தியாலயத்தில் பாதுகாப்புக் கடமையில் இருந்த காவலாளியைக் கட்டி வைத்து விட்டு, கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

அது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் அப்போது முறைப்பாடு செய்யப்பட்டு, 16 வருடங்கள் கடந்த நிலையில், வடமராட்சி வல்லைப் பகுதியில் வைத்து மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவரை, நெல்லியடி பொலிஸார் தற்போது கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .