Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 நவம்பர் 19 , பி.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
குழந்தைக்கு பால் கொடுத்தவாறு தாய் தூங்கியதால், பிறந்து 50 நாட்களான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம், வசந்தபுரம் - இளவாலை பகுதியில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
ஜெகநாதன் ஜெனிஸ்டன் என்ற ஆண் குழந்தையே, இவ்வாறு பால் புரையேறி உயிரிழந்துள்ளதாக, இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (18) அதிகாலை 2 மணியளவில், குழந்தை அழுதுள்ளது. அழுத குழந்தைக்கு தன்னுடன் அணைத்து பால் கொடுத்த வண்ணம் தாய் அசதியில் தூங்கியுள்ளார். அதிகாலை குழந்தையை தூக்கிய போது, உடல் குளிர்ந்த நிலையில் இருந்துள்ளதுடன், எந்தவித அசைவும் அற்று உடல் காணப்பட்டுள்ளது.
உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது, குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
6 hours ago
07 Jun 2025