2025 மே 17, சனிக்கிழமை

பூநகரி விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

Editorial   / 2020 மார்ச் 02 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பூநகரி வீதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த ஜீப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டர் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி  ஜெயந்திபுரத்தை சேர்ந்த   நா.பிரசாந்த் என்பவர் சம்பவ இடத்திலே  உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, மற்றைய வாகனத்தின் சாரதி தப்பி ஓடியுள்ளார் 

மேலதிக விசாரணையை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .