Freelancer / 2022 டிசெம்பர் 23 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி பூநகரி வேரவில் பகுதியில் தனியார் ஒருவரின் தோட்டத்தில் வைக்கப்பட்ட பொறியில் சிக்கிய பெண் சிறுத்தையை வனவளத் திணைக்களத்தினர் மீட்டுள்ளனர்.
தோட்டத்திற்கு வரும் பன்றி,முயல் உள்ளிட்ட விலங்குகளுக்காக வைக்கப்பட்ட பொறியில் சிக்கிய நிலையில் சிறுத்தை காணப்பட்டதை அவதானித்த காணி உரிமையாளர் கிராம சேவையாளர் மூலம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் குழு குறித்த சிறுத்தையை மீட்டு சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் வடமாகாண மருத்துவ சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளது. (a)

43 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
4 hours ago