2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா

Niroshini   / 2021 ஜூலை 29 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அநுராதபுரம் - கெப்பட்டிக்கொலாவ பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுகயீனம் காரணமாக கடந்த 26ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மறுநாள் (27) அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் முடிவு, நேற்று  (28) இரவு வெளியாகியதில், அதில் இவருககு தாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவருடன் தொடர்பினை பேணிய ஏனைய உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .