எஸ்.என். நிபோஜன் / 2018 டிசெம்பர் 17 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் பொலிஸ் வாகனம் மோதியதில் நேற்று (16) இரவு ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பரந்தன் நோக்கி சென்று கொண்டிருந்த முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்குச் சொந்தமான வாகனம் வீதியைக்கடக்க முற்பட்ட ஒருவரை மோதியுள்ளது.
இச்சம்பவத்தில் ஹட்டனைச் சேர்ந்த பி.பாலசுப்பிரமணியம் (வயது 52) என்ற நபர் படுகாயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி பொது வைத்தியசாலை அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சம்பவத்தையடுத்து பொலிஸ் சாரதியை கிளிநொச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago