2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

முதிரை மரக்குற்றிகளை கடத்திய இருவர் கைது

Gavitha   / 2016 ஒக்டோபர் 23 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராட்டிக்குளம் கீரிச்சுட்டான் காட்டுப்பகுதியிலுள்ள முதிரை மரங்களை வெட்டி, வவுனியாவுக்கு கொண்டு செல்ல முற்பட்ட இரண்டு சந்தேக நபர்களை சனிக்கிழமை (22) கைது செய்யததாக, மடு பொலிஸார் தெரிவித்தனர்.

மடு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, கீரிச்சுட்டான் காட்டுப்பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, வெட்டப்பட்ட முதிரை மரக்குற்றிகளை லொறியொன்றில் ஏற்றிக்கொண்டிருந்த இரண்டு பேரை பொலிஸார் கைது செய்யப்பட்டள்ளனர்.

இதன்போது, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 33 முதிரை மரக்குற்றிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .