2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மேய்ச்சல் தரவையில்லாமையால் கால்நடை வளர்ப்பாளர்கள் அவதி

Thipaan   / 2015 நவம்பர் 08 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு துணுக்காயின் கோட்டைக் கட்டியகுளம், அம்பலப்பெருமாள் குளம் ஆகிய கிராமங்களின் கால்நடை வளர்ப்பாளர்கள் மேய்ச்சல் தரவையில்லாததன் காரணமாக பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.

தற்போது காலபோக நெற்செய்கை இரு கிராமங்களிலும் மேற்கொண்டுள்ளதன் காரணமாக கால்நடைகளை எந்த இடத்தில் மேயவிடுவதென்ற நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது.

நீண்ட தூரங்களிலுள்ள காடுகளில் மேய்ச்சலில் ஈடுபடுத்தவேண்டிய நிலைமை காணப்படுகின்றது. துணுக்காய் பிரதேச செயலகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் நடாத்தப்பட்ட கூட்டங்களில் மேய்ச்சல் தரவைக்கான இடங்களை அடையாளப்படுத்தித் தருமாறு மேற்படி கிராமங்களின் கால்நடை வளர்ப்பாளர்கள் விடுத்தகோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இதன்காரணமாக, தற்போதும் கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களுடைய கால்நடைகளை வளர்ப்பதில் இடர்களை எதிர்கொண்டுள்ளனர்.

கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம் ஆகிய கிராமங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பில் முக்கியமான கிராமங்கள் என்பன குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X