Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2017 மே 18 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.நிதர்ஷன்
வடமாகாண சபையின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுக்கொண்டிருந்த போது பொதுமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில், முறுகல் நிலை தோன்றியது.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அருகில் இந்நினைவு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதன்பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றிபோது, பொதுமக்கள் இதனை அரசியல் மேடையாக்க வேண்டாம் எனக்கூறி அவருடைய உரைக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
அத்துடன், 'இந்நிகழ்வில் அரசியல் பேச வேண்டாம் எனவும் அஞ்சலி செலுத்தி விட்டுச் செல்லுங்கள்' எனவும் கோசமிட்டனர். இதனால், அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு பின் தணிந்தது.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago