Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2016 நவம்பர் 11 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி பூநகரி மண்டைக்கல்லாறு பாலம் 800 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்;படவுள்ளது என மாவட்ட செயலக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பூநகரி மன்னார் ஏ-32 வீதியின் புனரமைப்புப் பணிகள் நிறைவு பெற்று மக்கள் பாவனைக்கு விடப்பட்டபோதும், இதில் காணப்படும் மண்டைக்கல்லாறு பாலம் புனரமைக்கப்படாமல் காணப்படுவதனால் மழை காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் போக்குவரத்து துண்டிக்கப்;படும். இதனால் படகு போக்குவரத்து மேற்கொள்ளப்படுவது வழமை.
அத்துடன் குறித்த பகுதி மிக மோசமாக சேதமடைந்;து காணப்படுகின்றது. எனவே, இப்பாலததை புனரமைக்குமாறு பல்வேறு தரப்பினருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்;த பாலத்தின் கட்டுமானப்பணிகளுக்கு 800 மில்லியன் ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் இதற்கான கட்டுமானப்பணிகள் அடுத்தாண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மண்டைக்கல்லாறு வழியாக கடல்நீர் உட்புகுந்து வன்னேரிக்குளம் குஞ்சுக்குளம் பகுதிகளில் பயிர்;செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறி வருவதனால் மண்டைக்கல்லாறு பகுதியில் உவர் நீர் தடுப்பு கதவுகளை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் மாவட்டச்செயலக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago