Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
அரியாலை - பூம்புகார் பகுதியில், சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வருக்கு, தலா ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல், ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பித்தார்.
பூம்புகார் கடற்கரை பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (15) இரவு பெக்கோ வாகனத்தின் மூலம் மணல் அகழ்வில் ஈடுபட்ட 5 பேர், யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள், நேற்று (16), நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, மேற்கண்டவாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன், கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஒரு டிப்பர் வாகனத்தையும் 3 உழவு இயந்திரங்களையும் விடுவிக்குமாறும், நீதவான் உத்தரவிட்டார்.
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago