2025 ஜூன் 02, திங்கட்கிழமை

‘மதத்தை வைத்துக்கொண்டு நல்லிணக்கத்தை குழப்ப வேண்டாம்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

மதத்தை வைத்துகொண்டு, நாட்டின் நல்லிணக்கத்தை குழப்ப வேண்டாமென, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அத்துடன், வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்கான உரிமையைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற ரீதியில் தனக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு நேற்று (26) சென்றிருந்த அமைச்சர் மனோ கணேசன், அங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், இவ்விவகாரம் தொடர்பாக, கொழும்பிலுள்ள தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துடனும் அவசியம் ஏற்படின் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனும் நேரடியாகக் கலந்துரையாடி, இந்தப் பிரச்சினைக்கானத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பேனென, அவர் உறுதியளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X