2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் கே.ரஜீவன் வெற்றி

George   / 2015 நவம்பர் 08 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்ற இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில், மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிதேசச் செயலாளர் பிரிவில் போட்டியிட்ட கே.ரஜீவன் என்பவர்  அதி கூடிய வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
256 வாக்குகளைப்பெற்று இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராக இவர் தெரிவானார்.

அதேவேளை, மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் போட்டியிட்ட எப்.மதன் என்பவர் 198 வாக்குகளைப்பெற்று பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கான தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 28  சதவீதமான வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் கூறினார்.

3,867 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த போதும் 1,083 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X