2025 ஜூலை 16, புதன்கிழமை

மன்னாரில் இருந்து புத்தளம் நோக்கி தேசிய ஒலிம்பிக் தீப பவனி

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் 43ஆவது தேசிய விளையாட்டு விழா, இம்மாதம் 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மாத்தறையில் இடம்பெறவுள்ள நிலையில், குறித்த தேசிய விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு, வட, கிழக்கில் இடம்பெற்று வருகின்றது.

தேசிய ஒலிம்பிக் தீப பவனி, நேற்று முன்தினம் (2) வவுனியாவில் இருந்து  மன்னாரை வந்தடைந்த நிலையில், மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து மாவட்டச் செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில், நேற்று (3) காலை 10.30 மணியளவில்

தேசிய ஒலிம்பிக் தீப பவனியுடன் ஆரம்பமான ஊர்வலம்,  மன்னார் பிரதான வீதியூடாகச் சென்று, பின்னர் மன்னார் நகரில் இருந்து புத்தளம் நோக்கி நகர்ந்தது.

குறித்த பவனியின் ஆரம்ப நிகழ்வில் மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரிகள், திணைக்கள அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .