2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மரக்கடத்தலில் ஈடுபட்ட 9 பேர் கைது

Gavitha   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் 19 முதிரை மரக்குற்றிகளை இரு வாகனங்களில் ஏற்றிச் சென்ற ஒன்பது பேரையும் பொலிஸார் சனிக்கிழமை (01) கைது செய்துள்ளனர்.

ஒரு கப் ரக வாகனத்தில் 8 அடி நீளமுள்ள 16 முதிரை மரக்குற்றிகளும், மற்றைய கப் ரக வாகனத்தில் 3 முதிரை மரக்குற்றிகளையும் கடத்திச் சென்ற வாகனத்தின் சாரதிகள் மற்றும் மரங்களை வெட்டிய 7 பேர் ஆகியோர் முல்லைத்தீவு மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்;;யப்பட்ட ஒன்பது பேரும் முதிரை மரங்களை ஏற்றிச் சென்ற இரு கப்ரக வாகனங்களையும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத் தகவல்;கள் தெரிவிக்கின்றன.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .