2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மாவட்டச் செயலாளருக்கு கௌரவிப்பு

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில், மார்ச் 20ஆம் திகதியன்று நடைபெற்ற சர்வதேச மகளிர்தின விழாவில் மாதரறம் மாண்புற சோராது செயலாற்றும் செவ்வியத்தை பாராட்டி ”மாநிலம் பயனுற வாழ் மகளிர்” எனும் விருதை முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் பெற்றுக்கொண்டார்.

அதனையொட்டி, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில், வௌ்ளிக்கிழமை (22) மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் மாவட்ட செயலாளருக்கு கௌரவிப்பு நிகழ்வு கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில், மேலதிக மாவட்ட செயலாளர் கோ.தனபாலசுந்தரம், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .