2025 மே 05, திங்கட்கிழமை

முட்டிக்குள் இருந்து கைக்குண்டுகள் மீட்பு

Niroshini   / 2021 மே 18 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - பூவரசங்குளம், செங்கல்படை பகுதியில் உள்ள தோட்ட காணியில், முட்டி ஒன்றுக்குள் இருந்து, 30 கைக்குண்டுகளை, பூவரசங்குளம் பொலிஸார், நேற்று  (17) மாலை; மீட்டுள்ளனர்.

தோட்ட காணியை, அதன் உரிமையாளர் துப்புரவு செய்த போது,; முட்டி ஒன்றுக்ள் கைக்குண்டுகள் இருப்பதை அவதானித்து, அது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், அந்த முட்டியிலிருந்து 30 கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.

இப்பகுதியில், மேலும் வெடிபொருள்கள் இருக்கலாம் என்ற சந்தேகித்துள்ள பொலிஸார், நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த பகுதியை சோதனை மேற்கொள்ளவுள்ளதாக் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முகாம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X