2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவில் 865 வீடுகள் சேதம்

Editorial   / 2018 டிசெம்பர் 26 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன் 

கடந்த 4 நாட்களாக பெய்த மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 801 வீடுகள் பகுதியளவிலும் 64 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் பெய்த மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 ஆயிரத்து 25 குடும்பங்களை சேர்ந்த 25 ஆயிரத்து 889 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆயிரத்து 625 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 108 மக்கள் 9 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .