Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 26 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
கடந்த 4 நாட்களாக பெய்த மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 801 வீடுகள் பகுதியளவிலும் 64 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் பெய்த மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 ஆயிரத்து 25 குடும்பங்களை சேர்ந்த 25 ஆயிரத்து 889 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஆயிரத்து 625 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 108 மக்கள் 9 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago