2025 மே 05, திங்கட்கிழமை

முல்லைத்தீவில் 9 மீனவர்கள் கைது

Niroshini   / 2021 மே 26 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

முல்லைத்தீவில் நாயாறு தொடக்கம் கொக்குளாய் வரையான கடற்பரப்பில், நேற்று (25), சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 9 மீனவர்களை, கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் கைதுசெய்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்கள், கொக்குளாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களை, நேற்று (25) மாலை, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது,  9 பேரும், தலா இரண்டு இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X