2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

முல்லைத்தீவில் வரட்சி: ‘2,416 குடும்பங்கள் பாதிப்பு’

Editorial   / 2020 ஜூன் 24 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வரட்சி காரணமாக, 2,416 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவெனத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான குடிநீர் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வெலிஓயா பிரதேசத்தில், 430 குடும்பங்களைச் சேர்ந்த 1,540 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், 1,986 குடும்பங்களைச் சேர்ந்த 6,398 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனரெனத் தெரிவித்தார்.

ஏப்பரலில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய பிரதேசங்களில், மழைவீழ்ச்சி ஏற்பட்டுள்ள காரணத்தால், அப்பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்படவில்லையென்றும், விமலநாதன் கூறினார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .