Niroshini / 2021 மே 20 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு கடற்பரப்பில், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 4 மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், திருகோணமலை புல்மோட்டை பகுதியைச் சேர்ந்தவர்களென்றும், இவர்கள் 20, 23, 29, 28 வயதுகளையுடையவர்களென்றும், கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு கடற்பரப்பில், நாயாறுபகுதி கடற்படையினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, சுருக்குவலை, ஒளிபாச்சி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குறித்த 4 மீனவர்களையும் கைதுசெய்தனர்.
இதன்போது, அவர்களிடம் இருந்து இரண்டு படகுகளையும் மீட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் நால்வரும் முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
27 minute ago
38 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
38 minute ago
45 minute ago
1 hours ago