Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 17 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு செல்லும் வீதிகளில் படையினர் சோதனை நிலையங்களை அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளார்கள்.
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வு, நாளை மக்களால் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் படையினர், பொலிஸார், புலனாய்வாளர்களின் காண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, புதுக்குடியிருப்பில் செல்லும் வீதியில் மாத்தளன் சந்திப் பகுதியில் புதிதாக ஒரு படையினரின் சோதனை நிலையம் அமைக்கப்பட்டு பஸ்களில் வாகனங்களில் செல்லும் மக்களை சோதனையிடும் நடவடிக்கையினை தொடங்கியுள்ள அதேவேளை, வட்டுவாகல் பாலம் அருகில் முல்லைத்தீவில் இருந்து செல்பவர்களை சோதனை செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.
அதிகளவான படையினர் குவிக்கப்பட்டு வீதி மறியல்கள் ஏற்படுத்தப்பட்டு குறித்த வீதியால் செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது.
எதிர்வரும் 20ஆம் திகதி வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் பொங்கல் நிகழ்வுகு அதியுயர் பாதுகாப்பை படையினர் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த சோதனை நிலையங்களும் சோதனை நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
19 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
2 hours ago