2025 ஜூன் 07, சனிக்கிழமை

யாழ்.பல்கலைக்கழக தமிழ் மாணவன் மீது தாக்குதல்

Editorial   / 2018 ஜனவரி 26 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

யாழ்.பல்கலைக்கழக, வவுனியா வளாக,  தமிழ் மாணவன் மீது, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று (25) இரவு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, காயமடைந்த மாணவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள, யாழ்.பல்கலைக்கழக 1ஆம் ஆண்டு பிரயோக விஞ்ஞான பீட தமிழ் மாணவன் தங்கியிருந்த விடுதிக்கு, இரவு 9 மணியளவில் வந்த 2ஆம் ஆண்டு பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இன மாணவர்கள், தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது காயமடைந்த 1ஆம் ஆண்டு பிரயோக விஞ்ஞான பிரிவு மாணவனை, அவரது சக நண்பர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது, “நீங்கள் விடுதலைப்புலிகள், ஆகையால் இராணுவத்தினரின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு” பணித்துள்ளனர். இதன்போது பெரும்பான்மை இன மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு விடுதி காப்பாளர் சென்றவுடன், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் அவ்விடத்திலிருந்து அகன்று சென்றுள்ளனர். அதன் பின்னர் காயமடைந்த மாணவனை அவரது நண்பர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .