2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விபத்து: இரண்டு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

George   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி முரசுமோட்டை இரண்டாம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற வீதிவிபத்தில் பெண்கள் இருவர் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

சனிக்கிழமை  மலை 4.00 மணியளவில் முல்லைத்தீவிலிருந்து பரந்தன் நோக்கி வந்த கார், சாரதியின் அசமந்த போக்கினால் கட்டுப்பாட்டை மீறி, எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.

இந்த விபத்தில், பரந்தன் பகுதியில் இருந்து விசுவமடு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளில்  பயணித்த பெண்கள் இருவர், படுகாயமடைந்து வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .