2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வடக்கில் சிக்கிய தென்னிலங்கையர்

Freelancer   / 2022 மார்ச் 04 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பளம்பாசி பிரதேசத்தில் புதையல் தோண்ட முற்பட்ட  தென்னிலங்கையினை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நால்வரை ஒட்டுசுட்டான் பொலிசார் கைதுசெய்துள்ளார்கள்.

நேற்று இரவு பளம்பாசி பிரதேசத்தில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் இராணுவத்தினரால் தடுத்துவைக்கப்பட்ட நால்வரை ஒட்டுசுட்டான் பொலிசார் கைதுசெய்துள்ளார்கள்.

மாத்தறை மாவட்டத்தினை சேர்ந்த இருவர்,புத்தளம் மாவட்டத்தினை சேர்ந்த ஒருவர் நெடுங்கேணி சேனைப்பிலவினை சேர்ந்த ஒருவர் என நால்வரை கைது செய்துள்ள ஒட்டுசுட்டான் பொலிசார் அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகவும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

இவர்கள் புதையல் தோண்டுவதற்காக வந்துள்ளதுடன் இவர்களிடம் மத்திரம் வெத்திலை பாக்கு,பழம் சாம்பிராணி போன்ற பொருட்கள் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமமான ஒதியமலை,தண்ணிமுறிப்பு பகுதிகளில் புதையல் தோண்டும் நடவடிக்கைகள் அண்மைகாலத்தில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X