Editorial / 2020 ஜனவரி 02 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
வடக்குக்கான அபிவிருத்தியை, மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பமே செய்து கொடுத்ததென்பதை, யாரும் மறந்திருக்க மாட்டார்களென, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் ச.கனகரத்தினம் தெரிவித்தார்.
முல்லைத்தீவு - மல்லாவி நகர்ப் பகுதியில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகம், இன்று (02) திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இந்த அரசாங்கம், முல்லைத்தீவு மாவட்டத்துக்கான அபிவிருத்தியைச் செய்யக்கூடிய வாய்ப்பைத் தந்துள்ளதாகவும் நல்ல அபிவிருத்தியைச் செய்வதற்கு, எல்லோரும் தயாராக வேண்டுமெனவும் கோரினார்.
அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே, இந்த அம்மாச்சி உணவகம் திறக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்த அவர், இந்த உணவகத்தை, வடமாகாணம் முழுவதும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும் கூறினார்.
15 minute ago
26 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
56 minute ago