2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

வரட்சியால் 115,020 பேர் பாதிப்பு

Editorial   / 2017 ஜூன் 03 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சி காரணமாக  35,670 குடும்பங்களை சேர்ந்த 115,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ பிரிவு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக, முல்லைத்தீவில்  காணப்படும் கடும் வரட்சி காரணமாக கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, மணலாறு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ளவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ பிரிவு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

இதனடிப்படையில், அதிகம் பாதிக்கப்பட்டு குடிநீர் வசதியின்றி தவிக்கும் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள  33 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொண்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .